

டோக்கியோ,
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 19-21, 25-23, 15-21 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரணிடம் (தாய்லாந்து) வீழ்ந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் லக்ஷயா சென் 16-21, 14-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் கோகி வதனாபேயிடம் தோற்று வெளியேறி னார். பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-16, 16-21, 15-21 என்ற செட் கணக்கில் ஹூயாங் யூ சுனிடம் (சீன தைபே) தோல்வியடைந்தார்.