

டோக்கியோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்தியா சார்பில் முன்னணி வீரர், வீராங்கனைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் வாங் லிங் சிங் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.