கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி

கபடி மாஸ்டர்ஸ் தொடரில் கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் 48-19 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியஅணி வெற்றிபெற்றது. #KabaddiMastersDubai2018
கபடி மாஸ்டர்ஸ் 2018: கென்யாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
Published on

துபாய்,

துபாயில் கபடி மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜென்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றுள்ளன.

முன்னதாக நடைபெற்ற துவக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா 36-20 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணியினர் தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 27-9 என்ற புள்ளி கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியிலும் இந்திய அணியினரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதியில் இந்திய அணி 48-19 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற மற்றோரு லீக் ஆட்டத்தில் ஈரான் அணி 54-24 என்ற புள்ளிக்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. இந்திய அணி, 25-ந் தேதி நடைபெற உள்ள தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com