பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ரூபினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை மொத்தம் 4 பதக்கங்களை பெற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ரூபினா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் 7-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 1 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை  பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com