பாரா ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு முன்னேறினார்

பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
பாரா ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு முன்னேறினார்
Published on

பாரீஸ்,

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை ரிகர்வ் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - இத்தாலி வீரர் செட்டியாவன்ஆகியோர் மோதினர். இதில் ஹர்விந்தர் சிங் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com