புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

3வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின
புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி
Published on

புதுடெல்லி,

12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றில் புனேரி பால்டனை வீழ்த்தி தபாங் டெல்லி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. தோல்வி கண்ட புனேரி பால்டன் அணி 2வது தகுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற 3வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி 46-39 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் பாட்னா பைரேட்ஸ் வெளியேறியது.

நாளை 2வது தகுதி சுற்றில் புனேரி பால்டனை தெலுங்கு டைட்டன்ஸ் சந்திக்கிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com