நான் ஓய்வு பெறுகிறேன்!! பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது ரசிகர்களுக்கு திடீர் என ஒரு அதிர்ச்சியை கொடுத்தார்.
நான் ஓய்வு பெறுகிறேன்!! பேட்மிண்டன் வீராங்கணை பி.வி.சிந்து ரசிகர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி
Published on

புதுடெல்லி

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தனது ரசிகர்களுக்கு திடீர் என ஒரு அதிர்ச்சியை கொடுத்தார். 

கொரோனா வைரஸ் காரணமாக டென்மார்க் ஓபனில் பங்கேற்க முடியாமல் போனது கடைசி துரும்பு என்று  கூறி இருந்தார். 'நான் ஓய்வு பெறுகிறேன்' என்று ஒரு நீண்ட பதிவை வெளியிட்டார்.

'அமைதியின்மை, எதிர்மறை மற்றும் நிலையான பயம் ஆகியவற்றின் தற்போதைய உணர்விலிருந்து' ஓய்வு பெற விரும்புவதாகக் கூறி, அதுகுறித்த விளக்கத்தை அவர் அளித்து இருந்தார்.

இதனால் அவர் ஓய்வு பெறபோவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் கவனத்தை ஈர்ப்பதற்காகவே ஒய்வு என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். கண்ணுக்கு தெரியாத கொரோனா அச்சத்தை ஒதுக்கி வைக்க முடிவு செய்திருக்கிறேன். கொரோனா அச்சத்தில் இருந்து மட்டுமே விலகுவதாக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார். என பி.வி.சிந்து கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com