சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கு ரூ.1½ கோடி நிதியுதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

ரூ.1½ கோடிக்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன ஆயுட்கால தலைவர் என்.ராமச்சந்திரனிடம் நேற்று வழங்கினார்.
சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிக்கு ரூ.1½ கோடி நிதியுதவி: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
Published on

சென்னை,

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சென்னையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மற்றும் ஸ்குவாஷ் அகாடமியில் நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்பட 9 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான இந்திய அணியில் தேசிய சாம்பியன்களான அபய் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கண்ணா, சவுரவ் கோஷல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த போட்டியை சிறப்பான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதற்கட்ட நிதியுதவியாக ரூ.1 கோடிக்கான காசோலையை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்திய ஸ்குவாஷ் சம்மேளன ஆயுட்கால தலைவர் என்.ராமச்சந்திரனிடம் நேற்று வழங்கினார்.

சமீபத்தில் நடந்த சுதிர்மன் கோப்பை பேட்மிண்டனில் ஏமாற்றிய இந்திய வீரர்கள் அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இந்த போட்டியில் அசத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com