

பாங்காக்,
தாய்லாந்து மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் மலேசியாவின் ஷோலிக் அய்டிலை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்கள் பிரியன்ஷூ ரஜாவத், மன்ராஜ் சிங், சங்கர் முத்துசாமி முதல் சுற்றுடன் வெளியேறினர்.