

சென்னை,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காங்கில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, தைவானின் டுங் சியோ டாங் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் பிவி சிந்து 21-9, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.