உலகக் கோப்பை வில்வித்தை போட்டி; இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்

கோப்புப்படம்
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
மாட்ரிட்,
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 4) ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் மகளிர் காம்பவுண்ட் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, சீனதைபேவை எதிர்கொண்டது. ஜோதி சுரேகா, பர்னீத் கவுர், பிரித்திகா அடங்கிய இந்திய அணி 3-வது ரவுண்டில் 170-169 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆனால் பதற்றத்தால் இறுதி கட்டத்தில் செய்த தவறால் இந்திய அணி 225-227 என்ற கணக்கில் சீனதைபேயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது. மகளிர் தனிநபர் காம்பவுண்ட் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி 147-148 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எல்லா கிப்சனிடம் போராடி பணிந்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
இதன் கலப்பு அணிகள் பிரிவு வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஜோதி- ரிஷப் யாதவ் ஜோடி 156-153 என்ற கணக்கில் எல் சால்வடோரின் பாவ்லா கொராடோ- டக்ளஸ் விளாடிமிர் இணையை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றது.






