துபாய் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன்

image courtesy:twitter/@DDFTennis
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் யுகி பாம்ப்ரி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
துபாய்,
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இந்தியாவின் யுகி பாம்ப்ரி- ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரின் ஜோடி, ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து)- ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து) இணை உடன் மோதியது.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை யுகி பாம்ப்ரி ஜோடி கைப்பற்றி வெற்றி பெற்றது. யுகி பாம்ப்ரி இணை இந்த ஆட்டத்தில் 3-6, 7-6 மற்றும் 10-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
Related Tags :
Next Story






