

பாரீஸ்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மே 24-ந்தேதி பாரீசில் தொடங்க இருந்தது. கொரோனா அச்சத்தால் அந்த போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை செப்டம்பர் 27-ந்தேதி தொடங்க போட்டி அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அமெரிக்க ஓபன் முடிந்து அடுத்த 2-வது வாரத்தில் பிரெஞ்ச் ஓபனை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.