இத்தாலி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி


இத்தாலி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
x

image courtesy:twitter/@InteBNLdItalia

இவர் காலிறுதியில் கின்வென் ஜெங் உடன் மோதினார்.

ரோம்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), கின்வென் ஜெங் (சீனா) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட கின்வென் ஜெங் 6-4 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

கின்வென் ஜெங் அரையிறுதியில் கோகோ காப் உடன் மோத உள்ளார். அதிர்ச்சி தோல்வி கண்ட சபலென்கா காலிறுதி சுற்றோடு நடையை கட்டினார்.

1 More update

Next Story