

பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஐ.டி.எப். மகளிர் ஓபன் டபிள்யூ100 டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா சார்பில் சகஜா யமளப்பள்ளி, கொரியாவை சேர்ந்த வீராங்கனை தயியோன் பேக் என்பவருக்கு எதிராக விளையாடினார்.
இந்த போட்டியில், 6-2, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் கொரிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு யமளப்பள்ளி முன்னேறி இருக்கிறார்.