கொரியா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அலெக்சாண்ட்ரோவா


கொரியா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் அலெக்சாண்ட்ரோவா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Sept 2025 5:00 AM IST (Updated: 21 Sept 2025 5:00 AM IST)
t-max-icont-min-icon

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.

சியோல்,

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 11-ம் நிலை வீராங்கனையான எகதெரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷியா), கேத்ரினா சினியகோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்ட்ரோவா 6-4, 6-2 என்ற நேர் செட்டில் கேத்ரினா சினியகோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story