கொரியா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் கிரெஜிகோவா இணை சாம்பியன்


கொரியா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் கிரெஜிகோவா இணை சாம்பியன்
x

image courtesy:twitter/@WTA

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது.

சியோல்,

பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென் கொரியா தலைநகர் சியோலில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் செக் நாட்டின் சினியாகோவா - கிரெஜிகோவா இணை, கேட்டி மெக்னலி (அமெரிக்கா) - மாயா ஜாயிண்ட் (ஆஸ்திரேலியா) ஜோடியுடன் மோதியது.

இதில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரெஜிகோவா இணை 6-3 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

1 More update

Next Story