நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸி பாபிரின் சாம்பியன்

நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ரூப்லெவ் - பாபிரின் மோதினர்.
நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸி பாபிரின் சாம்பியன்
Published on

டொரண்டோ,

கனடாவின் டொரண்டோவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலிய வீரரான அலெக்ஸி பாபிரின், ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரே ரூப்லெவ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அசத்தலாக செயல்பட்ட பாபிரின் 6-2 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com