டேபிள் டென்னிசில் இருந்து ஓய்வை அறிவித்த தமிழக வீரர் சரத் கமல்

image courtesy:PTI
டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இருந்து தமிழக வீரர் சரத் கமல் ஓய்வு அறிவித்துள்ளார்.
சென்னை,
உலக டேபிள் டென்னிசில் 'ஸ்டார் கன்டென்டர்' தொடர் சென்னையில் வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருடன் இந்தியாவின் முன்னணி வீரருமான சென்னையை சேர்ந்த சரத் கமல் (வயது 42) ஓய்வு பெற உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.
கேல்ரத்னா, அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ள சரத் கமல் காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலப்பதக்கமும், ஆசிய விளையாட்டில் 2 வெண்கலப்பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 4 வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார். தேசிய சாம்பியன்ஷிப்பில் 10 முறை மகுடம் சூடியிருக்கிறார்.
Related Tags :
Next Story






