டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - சின்னர் பலப்பரீட்சை!

ஜோகோவிச் 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் அல்காரசை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

துரின்,

தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றிருந்த வீரர்கள் ரெட், கிரீன் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தனர்.

ஒவ்வொரு வீரரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். 'ரவுன்ட்-ராபின்' முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்போர் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள். அதன்படி நடைபெற்ற லீக் ஆட்டங்களின் முடிவில் 'கிரீன்' பிரிவில் ஜோகோவிச் மற்றும் சின்னர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். 'ரெட்' பிரிவில் கார்லஸ் அல்காரஸ் மற்றும் டேனியல் மேத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

அதன்படி நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் சின்னர், ரஷிய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான அல்காரஸ் உடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6-3 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் அல்காரசை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

ஜோகோவிச் இறுதிப்போட்டியில் சின்னருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். முன்னதாக இருவரும் மோதிய லீக் ஆட்டத்தில் சின்னர் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com