விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்கள் இரட்டையர் பிரிவில் இங்கிலாந்து ஜோடி சாம்பியன்

image courtesy:twitter/@Wimbledon
நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து ஜோடியான லாயிட் கிளாஸ்பூல் - ஜூலியன் கேஷ், ரிங்கி ஹிஜிகாடா (ஆஸ்திரேலியா) - டேவிட் பெல் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.
இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஜோடி 6-2 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Related Tags :
Next Story






