புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் மாநில அந்தஸ்து விவகாரம் அங்குள்ள அரசியல் களத்தில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. புதுச்சேரியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முழு அடைப்பு பந்த் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் முதல்-மந்திரி ரங்கசாமி எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர்களோடு டெல்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com