சட்டசபையை பார்வையிட்ட மாணவர்கள்

புதுவைக்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் சட்டசபை வளாகத்தை பார்வையிட்டனர்.
சட்டசபையை பார்வையிட்ட மாணவர்கள்
Published on

புதுச்சேரி

புதுவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் ஒயிட் டவுன் பகுதியில் உள்ள பிரெஞ்சு கால கட்டிடங்களை ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். இந்தநிலையில்  இன்று கடலூரில் இருந்து தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுலாவாக புதுச்சேரி வந்தனர். புதுவை பாரதி பூங்காவை பார்வையிட்ட அவர்கள் புதுவை சட்டசபை வளாகத்தையும் கண்டு களித்தனர். சட்டசபை கட்டிடம் முன்பு நின்று ஆசிரியர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com