தொட்டியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு

தொட்டியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
தொட்டியத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு
Published on

தொட்டியம், மார்ச்.30-
தொட்டியம் பகுதியில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோவில் விழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று மாலையில் தொட்டியத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 150 போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மாவட்ட போலீசாருடன் அதிவிரைவுப்படை போலீசாரும் கொடி அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த அணிவகுப்பு தொட்டியம் ஊரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதனால், பொதுமக்கள் அச்சமின்றி கோவில் விழாவை காண உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com