

சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் அழகம்மன் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அழகு விநாயகர் கோவில் ஆகிய கோவில்களில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. அதிகாலையில் அர்ச்சகர்கள் யாக பூசை நடத்தி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் கோபுரங்களில் கும்பநீர் ஊற்றினர். மேலும் கும்பத்தில் மலர்கள் தூவி தீபாராதனைகள் நடைபெற்றன. அழகம்மனுக்கும், விநாயகருக்கும் அலங்கார பூஜைகளும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.