பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த பக்கத்து வீட்டுக்காரரின் உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
Published on

கோட்டுச்சேரி

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த பக்கத்து வீட்டுக்காரரின் உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்தார்

நெடுங்காட்டை அடுத்த கிளியனூர் கோட்டகத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 61). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். மகன் வெளியூரில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் சண்முகமும், தனலட்சுமியும் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று சண்முகம் வேலைக்கு சென்றுவிட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், மாத்திரை போட்டுவிட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

சங்கிலி பறிப்பு

இந்தநிலையில் சண்முகத்தின் வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்ம ஆசாமி, தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்தார். சுதாரித்துக் கொண்ட தனலட்சுமி, தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதில் அறுந்த சங்கிலியின் ஒரு பகுதியுடன் (2 கிராம் தங்கம்) மர்மஆசாமி தப்பி ஓடிவிட்டார்.

இந்த துணிகர சம்பவம் குறித்து நெடுங்காடு போலீசில் சண்முகம் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

விசாரணையில், சண்முகம் வீட்டின் அருகில் வசிக்கும் வனரோஜா என்பவரின் அக்காள் மகன் பெரம்பூர் கடக்கம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (45) என்பவர் தனலட்சுமியிடம் சங்கிலி பறித்தது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com