தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

7 சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிடக்கோரி வேதாரண்யத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்புச்சட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
Published on

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் இமான்சேகர் தலைமை தாங்கினார். இதில் ஒன்றியச்செயலாளர் புகழேந்தி, மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் குமார், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ஜீவா பாரதி, இளைஞரணி பொறுப்பாளர் முத்துக்குமார், மாவட்ட பொறுப்பாளர் மருதம் பார்த்திபன், நகர செயலாளர் சத்திய மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசாணை

குடும்பன், காலாடி, பண்ணாடி, வாதிரியார், கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான் ஆகிய 7 சாதி உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com