லட்சார்ச்சனை விழா

திங்களூர் சந்திரன் கோவிலில் லட்சார்ச்சனை விழா நடந்தது
லட்சார்ச்சனை விழா
Published on

திருவையாறு, ஏப்.6-

திருவையாறு அருகே திங்களூர் சந்திரன் கோவிலில் சந்திரனுக்கு ஏக தின லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நோய் நொடி இன்றி வாழவும், செல்வங்கள் செழிக்கவும் குழந்தைகள் படிப்பில் தனித்திறமை பெற வேண்டி லட்சார்ச்சனை செய்து வழிபட்டனர். இதையொட்டி சந்திரன் அன்னப்பச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். லட்சார்ச்சனையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com