கோவில் அர்ச்சகர் திடீர் சாவு

திரு புவனை அருகே கோவில் அர்ச்சகர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
கோவில் அர்ச்சகர் திடீர் சாவு
Published on

திருபுவனை

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அர்ச்சகராக இருந்தவர் ராஜா (வயது 37). இதற்காக கல்லூரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.

நேற்று வீட்டின் அருகே திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த திருபுவனை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com