அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ- மூதாட்டி பலி

குர்லா அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்தில் மூதாட்டி பலியானார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ- மூதாட்டி பலி
Published on

மும்பை, 

குர்லா அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்தில் மூதாட்டி பலியானார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயங்கர தீ

மும்பை குர்லா கோகினூர் சிட்டி காம்பவுண்ட்டில் உள்ள 13 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று காலை 7 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 4-வது மாடியில் பற்றிய தீ 'மள மள' வென கொழுந்து விட்டு எரிந்து 10-வது மாடி வரையில் பரவியதோடு, கட்டிடத்தை கரும்புகை சூழ்ந்தது.

இதில் சிக்கி தவித்த பலர் செய்வதறியாமல் மொட்டை மாடிக்கு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் ராட்சத ஏணிகள் மூலம் கட்டிடத்தில் தவித்தவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

மூதாட்டி பலி

இவர்களில் மூச்சு திணறலால் மயங்கி கிடந்த 9 பேர் மீட்கப்பட்டு, உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சகுந்தலா ரமணி என்ற 70 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 8 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com