மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை

மணிபர்சு திருடியதாக தாய் திட்டியதால் 16 வயது சிறுமி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை
Published on

மும்பை, 

மணிபர்சு திருடியதாக தாய் திட்டியதால் 16 வயது சிறுமி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

காணாமல் போன மணிபர்சு

மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, நாக்பாடாவில் உள்ள வியாபாரி ஒருவர் வீட்டில் கடந்த 15 நாட்களாக வீட்டு வேலை செய்து வந்தாள். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் கொல்கத்தா செல்ல முடிவு செய்தனர். இதன்படி சிறுமியை அழைத்து வர தாய் நாக்பாடா சென்றார். அப்போது, வீட்டின் உரிமையாளரின் மகள் வைத்திருந்த பர்சு திடீரென காணாமல் போய் இருந்தது.

பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை தற்செயலாக சிறுமியின் பையில் சோதனை நடத்திய போது காணாமல் போன மணிபர்சு இருந்ததை கண்டனர்.

சிறுமி தற்கொலை

இதனால் சிறுமி மணிபர்சை திருடியதாக முதலாளி வீட்டில் குற்றம் சாட்டினர். இதனால், சிறுமியை அவளது தாய் திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சிறுமி முதலாளி வீட்டின் பால்கனிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தாள்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com