காரில் கடத்தி வரப்பட்ட 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்

சீர்காழி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 2,880 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக டிரைவரை கைது செய்துள்ளனர்.
காரில் கடத்தி வரப்பட்ட 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்
Published on

சீர்காழி,

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், சிவக்குமார், ஸ்டாலின் மற்றும் போலீசார் சீர்காழி அருகே சூரக்காடு முக்கூட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து சீர்காழி நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 60 அட்டை பெட்டிகளில் 2,880 மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார், கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர், காரைக்கால் மாவட்டம் ராயல்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் சந்தோஷ் (வயது 28) என்பதும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை சீர்காழி அருகே உள்ள புத்தூருக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சந்தோசை கைது செய்தனர். மேலும் போலீசார், மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com