ஆதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஈரம், வல்லினம், ஆறாவது சினம் போன்ற படங்களை இயக்கியவர் அறிவழகன். இவர் தற்போது ’சப்தம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
ஆதி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

ஈரம், வல்லினம், ஆறாவது சினம், குற்றம் 23 போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் அறிவழகன். இவர் தற்போது 'சப்தம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஆல்பா ஃப்ரேம்ஸ் சார்பில் இயக்குனர் அறிவழகன் மற்றும் 7ஜி பிலிம்ஸ் சிவா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் இயக்குனர் அறிவழகன் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஹாரர், திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் 'சப்தம்' படத்தின் அப்டேட்கள் வெளியாகும். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com