தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி போலீசாரிடம் பிடிபட்டார்

தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி போலீசாரிடம் பிடிபட்டார்
Published on

தானே,

தாத்ராநகர் ஹவேலி தாமனில் நடந்த வீடு புகுந்து திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர் மும்ராவை சேர்ந்த ஆயஸ் மன்சூரி (வயது35) என்பது என தெரியவந்தது. இவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்திய போது ஏற்கனவே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் தலைமறைவானது தெரியவந்தது. அவர் ரபலே பகுதியில் நடமாடி வருவதாக தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு வந்த ஆயஸ் மன்சூரியை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் ஒரு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com