பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
பில்லூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணை அமைந்துள்ளது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக கடந்த 17-ந் தேதி அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரிக்க தொடங்கியது. இதனால் அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இதனைத்தொடர்ந்து 100 அடி கொள்ளளவு உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்தது. இதையடுத்து அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மழையளவு குறைந்ததால் அணைக்கு படிப்படியாக நீர்வரத்து குறைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 93.5 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் குறைந்ததால் 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 92 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com