சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
Published on

வால்பாறை

வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதேப்பகுதியை சேர்ந்த ரமேஷ் (19) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில் சிறுமியிடம் திருமண ஆசைகாட்டி அவரை, ரமேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். இதுபற்றிய தெரியவந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து வால்பாறை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com