7 முக்கிய அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது -நிர்மலா சீதாராமன்


7 முக்கிய அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பட்ஜெட் இது -நிர்மலா சீதாராமன்
x

இந்தியப் பொருளாதாரத்தை பிரகாசமான நட்சத்திரமாக உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

புதுடெல்லி

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது.

ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இந்தியப் பொருளாதாரம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது. பெண்கள், குழந்தைகள், பட்டியலின மக்களின் முன்னேற்றத்தை அடிப்டையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளுபிரிண்டாக இந்த பட்ஜெட் இருக்கும்

கொரோனா காலத்தில் யாரும் பசியில்லாத நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியது

இந்தியப் பொருளாதாரம் உலகில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில், பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தை பிரகாசமான நட்சத்திரமாக உலகம் அங்கீகரித்துள்ளது. நமது பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பெரிய பொருளாதாரங்களில் மிக அதிகமாக இருக்கும்.

முந்தைய பட்ஜெட்டில் போடப்பட்ட அடித்தளத்தில் கட்டுவோம் என்று நம்புகிறோம்

2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்துள்ளது. தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஏழைகளுக்கான உணவுத் திட்டத்துக்கு அடுத்த ஓராண்டுக்கு 2 லட்சம் கோடி ஒதுக்கீடு

இந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நமது டிஜிட்டல் உள்கட்டமைப்பை எதனோடும் ஒப்பிடமுடியாது, டிஜிட்டல் உள்கட்டமைப்பு கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவை தொடர்ந்து கண்காணிக்க உதவியது.

கொரோனா காலத்தில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்துடன் யாரும் பசியுடன் படுக்கைக்குச் செல்லக்கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்தோம்.

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உறுப்பினர் எண்ணிக்கை 7 கோடியாக இருமடங்காக அதிகரித்திருப்பது வேலைவாய்ப்பு அதிகரிப்பை பிரதிபலிக்கிறது.உறுப்பினர் எண்ணிக்கையை இரட்டிப்.பாக்குவதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் மிகவும் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

குடிமக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை எளிதாக்குதல், வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கம் மற்றும் மைக்ரோ பொருளாதார சூழ்நிலைகளை வலுப்படுத்துவதற்கான வலுவான உத்வேகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஜி20 தலைவர் பதவி இந்தியாவிற்கு ஒரு புதிய உலக ஒழுங்கை வலுப்படுத்த உதவும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும்.

9.6 கோடி சமையல் கேஸ் இணைப்புகள், 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

11.4 கோடி விவசாயிகளுக்கு அவர்களது கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் 7% ஆக உயரும் இது மற்ற நாடுகளை விட மிக அதிகம். பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். இந்திய பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் செல்கிறது. நல்ல எதிர்காலம் நமக்கு உள்ளது.

விவசாயத் துறையில் புதிய ஸ்டார்ட் அப்புகள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்

பட்ஜெட்டில் ஏழு முன்னுரிமைகள் வழங்கப்பட்டு உள்ளது இவற்றில், உள்ளடக்கிய வளர்ச்சி, பசுமை வளர்ச்சி, இளைஞர் சக்தி மற்றும் நிதிச் சக்தி ஆகும்.

அம்ரித் காலுக்கான எங்கள் பார்வையில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரம், வலுவான பொது நிதி மற்றும் வலுவான நிதித் துறை ஆகியவை அடங்கும். சப்கா சாத், சப்கா பிரயாஸ் மூலம் இந்த 'ஜன்பகிதாரி'யை அடைய வேண்டியது அவசியம்.

1) உள்ளடக்கிய வளர்ச்சி

2) கடைசி மைலை அடைதல்

3) உள்கட்டமைப்பு முதலீடு,

4) திறனை அதிகரித்தல்

5 ) பசுமை வளர்ச்சி,

6) இளைஞர்கள்

7) வலுவான நிதித் துறை


Next Story