

வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை ஆலங்காயம் ஒன்றியக் குழுத்தலைவர் சங்கீதா பாரி, துணைத்தலைவர் பூபாலன், பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி தலைமை ஆசிரியர், சுகாதார பணியாளர்கள், தனியார் கொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டனர்.