வருசாபிஷேகம்

சாய்பக்த ஆஞ்சநேயர் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது
வருசாபிஷேகம்
Published on

உடன்குடி:

உடன்குடி அருகேயுள்ள கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் உள்ள சாய்பக்த ஆஞ்சநேயர் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி விநாயகர் வழிபாட்டுடன் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை, நண்பகல் ஸ்ரீசாய் பக்த ஆஞ்சநேயர் மூலவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com