பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

காரைக்கால் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

திருநள்ளாறு

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி, சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குதல், உற்பத்தியாளர் குழு பெயர் பலகை திறப்பு விழா விழிதியூர் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன் தலைமை தாங்கினார். திரு- பட்டினம் எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு விவசாய கருவிகள், வங்கிக்கடன் ஆகியவற்றை வழங்கினார். அப்போது பேசிய அவர், பெண்கள் தொழிலில் முன்னேற வேண்டும். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் அரசு சார்ந்த திட்டங்கள் தேவை என்றாலும் உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

விழாவில் புதுவை பாரதியார் கிராம வங்கி அதிகாரிகள், இணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com