ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

துடியலூர், மருதமலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்
Published on

துடியலூர்

துடியலூர், மருதமலையில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

வீட்டின் கதவை உடைத்தன

கோவை துடியலூர் அருகே குருடம்பாளையம் லட்சுமி நகரில் நேற்று அதிகாலையில் 3 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து ஒரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் தொட்டியை கீழே தள்ளி தண்ணீரை குடித்தன. மேலும் வீட்டின் கதவை உடைத்ததோடு கொட்டகையையும் சரித்தன.

இதையடுத்து அங்கிருந்து காட்டுயானைகள் வெளியேறி தெருக்களில் சுற்றித்திரிந்தன. அவை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதியில் முகாமிட்டு இருந்தன. அதன்பிறகு மீண்டும் மலைப்பகுதிக்கு திரும்பின.

மருதமலை

இதேபோன்று மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் 2 குட்டிகள் உள்பட 8 காட்டுயானைகள் மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனிக்கு புகுந்தன. இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி காட்டுயானைகளை விரட்டியடித்தனர். காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com