கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
கூடலூரில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்
Published on

கூடலூர்,

இந்த நிலையில் கூடலூர் அருகே தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி, பேபி நகர் உள்ளிட்ட இடங்களில் குட்டியுடன் 8 காட்டுயானைகள் முகாமிட்டு வருகிறது. நேற்று காலை 11 மணிக்கு அந்த காட்டுயானைகள் ஊருக்குள் வந்து முகாமிட்டது.

அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து மாலை 5 மணிக்கு காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது ஒரு காட்டுயானை வனத்துறையினரை விரட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பட்டாசு வெடித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com