ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 8 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Published on

செங்கல்பட்டு,

தமிழகத்தில் அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே திருப்போரூர் கூட்டுசாலையில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது செங்கல்பட்டு நகரத்தில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் நிரப்ப வந்த 2 வாகனங்களை மறித்து சோதனையில் ஈடுபட்டனர் அந்த வாகனத்தில் கொண்டு வந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பணம் இருந்த 2 வாகனங்களையும் செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்து அதில் இருந்த ரூ.1 கோடியே 8 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் செங்கல்பட்டில் ரூ.1 கோடியே 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com