மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

திருநள்ளாறு அருகே சாலையின் குறுக்காக சென்ற மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Published on

திருநள்ளாறு

திருநள்ளாறை அடுத்த அகலங்கண்ணு கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 31). கூலித்தொழிலாளி. அவரது மனைவி ரேணுகா (29). இவர்களது மகன் விக்னேஷ் (8). இந்தநிலையில் திருநள்ளாறு சந்தை வெளித்தோப்பில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு ரேணுகா தனது மகனுடன் சென்றார். அவர்களை அழைத்து வர ஜீவானந்தம் மோட்டார் சைக்கிளில் சென்றார். திருநள்ளாறு கான்பெட் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது சாலையின் குறுக்காக சென்ற மாடு மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து காரைக்கால் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com