தாசில்தார்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
தாசில்தார்கள் பணியிட மாற்றம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாரராக இருந்த சரவணன், விருதுநகர் பறக்கும் படை தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் பறக்கும் படை தாசில்தாரராக இருந்த ராமசுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தாரராக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தூர் தனி வட்டாட்சியராக இருந்த பஞ்சவர்ணம், சாத்தூர் நில எடுப்பு தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தூர் நில எடுப்பு தாசில்தாராக இருந்த பழனிச்சாமி சாத்தூர் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com