இளம்பெண் திடீர் சாவு

வில்லியனூர் அருகே இளம்பெண் திடீரென உயிரிழந்தார்.
இளம்பெண் திடீர் சாவு
Published on

வில்லியனூர்

காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 35). அவரது மனைவி வனிதா (32). இவர்களுக்கு குழந்தை இல்லாததால் புதுச்சேரியில் உள்ள உறவினர் மூலம் கோரிமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டி இருந்ததால் அவர்கள், வில்லியனூர் கணுவாப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்று இரவு வனிதாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.

இதையடுத்து கணவர் தினேஷ் அவரை ஆட்டோ மூலம் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வனிதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com