

சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). இவர் தேவிகாபுரம்-போளூர் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் கஞ்சா விற்றார்.
அந்த வழியாக ரோந்து சென்ற சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து, சதீஷ்குமாரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.