வீர தீர சூரன் 2 : 'ஆக்சன் நிறைந்த படம்' - டைரக்டர் அருண் குமார்


வீர தீர சூரன் 2 : ஆக்சன் நிறைந்த படம் - டைரக்டர் அருண் குமார்
x

வீர தீர சூரன்- 2 ஆக்‌சன் நிறைந்த படம் என்று டைரக்டர் அருண் குமார் கூறினார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விக்ரம். இவர் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து விக்ரமின் 62-வது படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு இவர் முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில், இப்படத்திற்கு வீர தீர சூரன் (பாகம்-2) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தை ரியா ஷிபு தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகிறது. இதுவரை இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் துசாரா விஜயன் ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து டைரக்டர் பேசுகையில்,

இது ஒரு ஆக்சன் நிறைந்த படம். தற்போது படத்தின், முன் தயாரிப்பு பணியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் மதுரைக்கு செல்ல இருக்கிறோம். அங்கு முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். என்றார்.

மேலும், விக்ரம் குறித்து பேசுகையில், எல்லோருக்கும் தெரியும் விக்ரம் அர்ப்பணிப்போடு நடிக்கக்கூடிய நடிகர். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாத்த வேண்டும். என் மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புகிறேன்." என்றார்


Next Story