காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது


காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 April 2017 8:00 PM GMT (Updated: 12 April 2017 7:27 PM GMT)

காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 35). இவர் கடந்த 9–ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

ஆறுமுகநேரி,

காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் முகமது இம்ரான் (வயது 35). இவர் கடந்த 9–ந்தேதி இரவில் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகநேரி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகநேரி– அடைக்கலாபுரம் ரோடு சீனந்தோப்பு பகுதியில் மூன்று சக்கர சைக்கிளில் 2 பேர் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை ஏற்றி வந்தனர். போலீசார் அவர்களை வழிமறித்து விசாரித்தனர்.

விசாரணையில், ‘அவர்கள் ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மகேஷ் (38), ஆறுமுகநேரி ராஜமன்யபுரத்தைச் சேர்ந்த அருளப்பன் மகன் முத்துராஜ் (33) என்பதும், இவர்கள் முகமது இம்ரானின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று, அதன் அனைத்து உதிரிபாகங்களையும் தனியாக கழட்டி விற்க கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து மகேஷ், முத்துராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, உதிரி பாகங்களுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story