கோவில் அர்ச்சகர் பணி இடைநீக்கம்


கோவில் அர்ச்சகர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 3 May 2022 11:10 PM GMT (Updated: 3 May 2022 11:10 PM GMT)

கோவில் அர்ச்சகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சேலம்:
சேலம் அம்மாபேட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சீதா ராமச்சந்திரமூர்த்தி கோவில் உள்ளது. இந்த கோவில் அர்ச்சகராக கண்ணன் (வயது 32) பணியாற்றினார். இந்த நிலையில் இவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து செயல் அலுவலர் புனித்ராஜ் உத்தரவிட்டு உள்ளார். 
இது குறித்து செயல் அலுவலர் புனித்ராஜ் கூறும் போது, சரியான நேரத்திற்கு கோவில் நடை திறக்காதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அவர் மீது எழுந்தது. இதனால் அர்ச்சகர் கண்ணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்’ என்றார்.

Next Story